இருமொழி அடையாள அட்டை தலைவலி தருகிறதாம்....!
சிங்களம், தமிழ் இரு மொழிகளிலும் அடையாள அட்டை உருவாக்குவதில் சரியான முறையில் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படாமையினால், தேசிய அடையாள அட்டை ஒருநாளில் வழங்கும் சேவை இருநாட்களாகியிருக்கின்றன. ஏனைய சேவைகளும் பெரும் தலையிடியைக் கொடுத்துள்ளது.
இம்மாதம் முதல் இருமொழிகளிலும் கூடிய அடையாள அட்டை வழங்குவதற்காக ஆவன செய்யப்பட்டுள்ள போதும், சரியான தொழில்நுட்பம் பயன்படுத்தப்படாமையினால் சிங்கள பெயர்களை தமிழ்ப்படுத்தும் போது, பிரச்சினைகள் மேலெழுந்துள்ளதாக ஆள் அடையாள அட்டைத் திணைக்கள அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
அதனால் ஒரு அடையாள அட்டையை பல வேளைகளில் மாற்றியமைக்க வேண்டியுள்ளதாகவும், ஒரு நாள் சேவையை எதிர்பார்த்து வருவோர் இதனால் இரண்டு மூன்று நாட்களை எதிர்பார்த்திருக்க வேண்டியிருக்கின்றது.
அடையாள அட்டையொன்றை பல வேளைகளில் மாற்றியமைப்பதால், உடனடியாக வழங்கக் கூடிய அடையாள அட்டைகள் விரல் விட்டெண்ணக் கூடிய அளவிலேயே இருக்கின்றன எனவும், அவ்வாறு வழங்குவதற்கும் ஒருநாளில் 18 - 20 மணித்தியாலங்களைச் செலவு செய்ய வேண்டியுள்ளதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.
(கேஎப்)
0 comments :
Post a Comment