Sunday, March 23, 2014

பொராலை ஓஐஸி கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர் கைது!

ஹங்வெல்ல துந்தான பிரதேசத்தில் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பின்போது, பொராலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் உடம்பின்மீது மரமொன்றை வெட்டி வீழ்த்தி கொலை செய்தவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

அவர்கள் இருவரும் திருகோணமலை, இரத்னபுரி இடங்களிலிருந்தே கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் இருவரும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியுடன் கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர்கள் எனக் கூறப்படுகின்றது.

51 வயதுடைய இலந்தாரி பேடிகே சரத் மற்றும் 33 வயதுடைய நுவரபக்ஷ பேடிகே நிமல் எனும் இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இருவரும் அவிஸ்ஸாவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com