Sunday, March 23, 2014

மதில்களும் இல்லை… மதியும் இல்லை.. பாதையை வீட்டு விலகி ஓடையில் விழுந்தது ஜீப்வண்டி!

நேற்றிரவு (22) பதை தடுமாறிய ஜிப் வண்டி ஒன்று ஓடையில் விழுந்துள்ள சம்பவம் வெலிகம - தெனிப்பிட்டியில் இடம்பெற்றுள்ளது.

வெலிகம - தெனிப்பிட்டிய பாடசாலைக்கு முன்னாள் உள்ள ஓடையில் ஜிப் வண்டி ஒன்று தலைகீழாகத் தடம்புரண்டுள்ளது.

ஓடையின் இரு மருங்குகளிலும் மதில்கள் எழுப்பபடாத காரணத்தால் வண்டி பாதையை விட்டு விலகி ஓடையில் விழுந்திருக்கலாம் எனவும்… குடிபோதையில் வாகனத்தை வேகமாக ஓட்டிவந்த சாரதி கண்தெரியாமல் பாதையிலிருந்து வாகனத்தை ஓடையில் திருப்பியிருக்கக் கூடும் எனவும் பொதுமக்கள் பேசிக்கொள்கின்றனர்.

இதுபற்றி சம்பவம் நிகழ்ந்த இடத்தை நேரில் கண்ட ஒருவர் குறிப்பிடும்போது, அரசியல் மேடைகள் வானளாவ முழங்கின்றது. அதைச் செய்தோம்.. இதைச் செய்தோம்.. என. செய்தவை இருக்கட்டும்.. இவ்வாறான ஓடைகளின் மருங்குகளில் பொதுமக்களின் பாதுகாப்பை நிச்சயிக்கும் வண்ணம் குறைந்தளவு மதில்களை ஏற்படுத்தித் தர வேண்டாமா? எனக் குறிப்பிட்டார்.

விபத்துக்குள்ளான நபர் மருத்துவமையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

(எம்.ஆர்.எம். நௌஷாத்)


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com