Tuesday, March 4, 2014

இரண்டு மாதக் குழந்தையை வீதியில் வீசிச்சென்றனர் பெற்றோர்…

பெற்றோரை வலைவீசிப் பிடித்தனர் பொலிஸார்…

இரண்டு மாத ஆண் பிள்ளையொன்றை, கண்டி - யுகும்பொல பிரதேச நடுத்தெருவில் விட்டுச் சென்றதாகக் கூறப்படும் தம்பதியினரை கண்டி பொலிஸ் தலைமையகம் கைதுசெய்துள்ளது.

கைதுசெய்யப்பட்டுள்ள பிள்ளையின் பெற்றோர் பொலிஸ் தலைமையகத்தினால் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறும், குழந்தையை “டிக்கிரி” சிறுவர் இல்லத்திற்கு ஒப்படைக்குமாறும் நீதிமன்றம் ஆணையிட்டது.

ஹெட்டன் பிரதேசத்தைச் சேர்ந்தோரே பெற்றோர் எனக் குறிப்பிட்டுள்ள பொலிஸார், இத்தம்பதியினர் சட்ட ரீதியாக திருமணம் ஆகாதவர்கள் எனவும், அதனாலேயே அவர்களிருவரும் குழந்தையை நடுத்தெருவில் விட்டுச் சென்றுள்ளனர் எனவும் குறிப்பிடுகின்றனர்.

(கேஎப்)

1 comments :

Anonymous ,  March 4, 2014 at 4:08 AM  

ivar kalukku thirumanam seithu vaiththu kulanthaijai oppadaikkavum

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com