Monday, March 24, 2014

மரண தண்டனை அறிக்கை விரைவில் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படும்! - கஜதீர

மரண தண்டனை விதிப்பது தொடர்பான அறிக்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் விரைவில் ஒப்படைக்கப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்தார்.

பாரிய குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு அதனை நிறைவேற்ற வேண்டுமென்ற கோரிக்கையை உள்ளடக்கி இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

நீதி அமைச்சும், சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சும் கூட்டாக இணைந்து இந்த அறிக்கையை தயாரித்துள்ளன.

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்களை தடுக்க மரண தண்டனை அமுல்படுத்தப்பட வேண்டுமென பரவலாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே மரண தண்டனை நிறைவேற்றுவது தொடர்பிலான தீர்மானத்தை அரசாங்கமே எடுக்க வேண்டுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

(எம்.ஜே.எம். தாஜுதீன்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com