இரசாயன ஆயுதங்களை படையினர் பயன்படுத்தியதில்லை- இராணுவப் பேச்சாளர்!
புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் எல்லா சந்தர்ப்பங்களிலும் இராணுவத்தினர் மரபு ரீதியான ஆயுதங்களை மட்டுமே பயன்படுத்தியதாகவும் இரசாயண ஆயுதங்கள் எதையும் படையினர் பயன்படுத்தியதில்லை என இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.
ஜெனீவா மனித உரிமைப் பேரவை அமர்வுகளை இலக்கு வைத்து இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினர் இரசாயண ஆயுதங்களை பயன்படுத்தியததாக ஒரு போலித் தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாகவும் எனினும் படையினர் எப்போதும் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தவில்லை எனினும், புலிகளின் ஆயுதக் களஞ்சியங்களில் இருந்து இரசாயன ஆயுதங்கள் மீட்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
எனினும் இலங்கை அரசாங்கத்தையும் இராணுவத்தையும் அசௌகரியத்திற்குள் ஆழ்த்தும் நோக்கில் இவ்வாறான போலித்தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment