Sunday, March 16, 2014

ரணில் சொல்வதையே இன்று அநுரவும் சொல்கிறார்! -உதய கம்மன்பில

வன்முறைக்கு வன்முறையால் பதில் கொடுக்காதபோதும் “கார்போட்ர்ட்” வீர்ர்களுக்கு பயமில்லை என ஜாதிக ஹெல உறுமயவின் மேல் மாகாண சபை வேட்பாளரும், முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினருமான வழக்கறிஞர் உதய கம்மன்பில குறிப்பிடுகிறார்.

“நாங்கள் அகிம்சை வழியிலேயே தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறோம். சனிக்கிழமை நான் ருக்மல்கமவில் கூட்டமொன்றில் பேசிக் கொண்டிருக்கும்போது, அங்கு கையேடுகள் பகிர்ந்துகொண்டிருந்த ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த இரு வேட்பாளர்களைக் கண்டு, எனது பேச்சை இடைநிறுத்திவிட்டு அவர்களிடம் சென்று அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தேன். நாங்கள் மிகவும் அகிம்சை வழியிலேயே தேர்தல் விடயங்களை முன்னெடுக்கிறோம். நிராயுதபாணிகளாகச் சென்று புலிப் பயங்கரவாதிகளை தோற்கடித்த எங்களுக்கு கார்ட்போட் வீரர்கள் எம்மாத்திரம்…? நாங்கள் அவர்களுக்குப் பயமில்லை.

அநுர ஜேவிபியின் தலைவரான பின்னர், ரணிலின் வழியில் செல்லத் தொடங்கியுள்ளார். ரணில் சொல்வதையே இவரும் சொல்கிறார். நான் அநுரவுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். நீங்கள் உங்கள் சட்ட ஆலோசகர் சுனில் வடவலவிடம் கலந்தாலோசித்து பேசுங்கள். ரணில் விக்கிரமசிங்கவுக்கு வரலாற்றில் பாடம் கற்றுக் கொள்ளலாம்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com