Monday, March 24, 2014

பொலிஸ் நிலையங்களின் சிவில் பாதுகாப்புக் குழுக்களுக்கான கலந்துரையாடல்!

காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்கு உட்பட்ட பொலிஸ் நிலையங்களின் சிவில் பாதுகாப்புக் குழுக்களுக்கான கலந்துரையாடல் ஒன்று நேற்று(23.03.2014) ஞாயிற்றுக்கிழமை நெல்லியடி மத்திய மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.

காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்கு உட்பட்ட தெல்லிப்பளை, பருத்தித்துறை, நெல்லியடி, வல்வெட்டித்துறை, இளவாலை, பலாலி, காங்கேசன்துறை, அச்சுவேலி பொலிஸ் நிலையங்களுக்கு உட்பட்ட சிவில் பாதுகாப்பு குழுவினருக்கே இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.

நேற்றைய இந்த கலந்துரையாடலில் வட மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித விஜயசுந்தரா, பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், கிராம அலுவலர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், மத குருமார் எனப் பெரும் எண்ணிக்கையானோர் கலந்து கொண்டிருந்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com