சட்டவிரோத ஆட்கடத்தலுடன் தொடர்புடைய நபர் புலனாய்வு பிரிவினரால் கைது!
கடல் வழியாக பெரும் எண்ணிக்கையிலானவர்களை சட்டவிரோத ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பியது தொடர்பில் முகுந்தன் என்ற சந்தேக நபர் ஒருவரை மட்டக்களப்பில் சில மாதங்களாக மாறு வேடத்தில் கடமையாற்றி வந்த புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளின் மூலம் பல கோடி ரூபா பணம் சம்பாதித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறதுடன் குறித்த நபர் அதிகளவான இலங்கையர்களை ஆஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் அனுப்பி வைத்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது என புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment