தோற்றனர் நதீஷா, அனர்கலீ இருவரும்…
இம்முறை தென் மாகாண சபைக்காக மாத்தறை மாவட்டத்திலிருந்து போட்டியிட்ட அனர்கலீ ஆகர்ஷா, நதீஷா ஹேமமாலீ இருவரும் தோல்வியைத் தழுவியுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து போட்டியிட்ட அனர்கலீ.ஆகர்ஷா சென்ற முறை தென் மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெற்று மாகாண சபைக்குத் தெரிவானபோதும், இம்முறை அவர் 8842 விருப்பு வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். அவர் விருப்பு அடிப்படையில் 18 ஆவது இடத்தில் உள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து மாத்தறை மாவட்டத்திலிருந்து போட்டியிட்ட நதீஷா ஹேமமாலீ விருப்பு வாக்குகள் 11006 பெற்று விருப்புப் பட்டியலில் 9 ஆவது இடத்தில் உள்ளார்.
மாத்தறை மாவட்டத்திலிருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து 10 பேரும் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து 04 பேரும் தெரிவாகியுள்ளனர்.
(கேஎப்)
0 comments :
Post a Comment