Monday, March 31, 2014

'தம்பதிவ” போவதற்கென பணம் சேகரித்த பௌத்த பிக்கு பெண்ணொருவருடன் போதையில்....

போதையில் இருந்த பௌத்த பிக்கு உட்பட அறுவர் கைது!

முச்சக்கர வண்டி மூலம் பகல்வேளைகளில் வீடு வீடாகச் சென்று, உதவி சேகரித்து இரவு நேரங்களில் ஒரு வீட்டில் தங்கியிருந்து மதுபானம் அருந்திக் கொண்டிருந்த பௌத்த பிக்கு ஒருவர் பெண் ஒருவருடனும், இன்னும் இளைஞர்கள் மூவருடனும் வீட்டு உரிமையாளருடனும் கைதாகியுள்ளார்.

கலகெதர பொலிஸ் வலயத்திற்குட்பட்ட மல்தெனிய பிரதேசத்திலுள்ள வீடொன்றில் பௌத்த பிக்குகள் மூவர் பெண்ணொருவருடன் இருப்பதாக சென்ற 29 ஆம் திகதி இரவு 9.00 மணிக்கு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கேற்ப, பொலிஸார் அவ்வீட்டைச் சுற்றிவளைத்த போது, பௌத்த பிக்கு ஒருவரும், தனது பயணப் பொதிகளில் காவியுடையை மறைத்து வைத்துக்கொண்டிருந்த இளைஞர்கள் இருவரும் கைதாகியுள்ளனர். அவர்களுடன் முச்சக்கரவண்டி உரிமையாளரும், வீட்டு உரிமையாளரும் கைதாகியுள்ளனர்.

பௌத்த மதகுரு தெமட்டகொடையைச் சேர்ந்த விகாரை ஒன்றைச் சேர்ந்தவர் என்பதும், பெண் வீரம்புகெதர பகுதியில் வசித்துவந்தவர் என்பதும், இளைஞர்கள் இருவரும் கம்பல, வந்துரம்ப பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதும், முச்சக்கர வண்டிச் உரிமையாளர் களுத்துறை தெற்கைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

அவர்கள் தம்பதிவ போவதற்கெனக் கூறிக் கொண்டு வீடு வீடாகச் சென்று பணம் திரட்டியுள்ளனர். கைதுசெய்யப்படும்போதும் அதிக மதுபோதையில் பௌத்த பிக்கு இருந்ததாக பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணைகளின் பின்னர் குறிப்பிட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்த இரண்டு கஞ்சாக் கட்டுக்களும், ஆபாச வீடியோக்கள் இரண்டும், 2000 ரூபா பணமும், கைத்தொலைபேசிகள் ஐந்தும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் நேற்று (30) கண்டி நீதவான் நீதமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com