Wednesday, March 26, 2014

பொன் அணிகளின் போரில் அமலனை அடித்து கொலை செய்த 6 பேர் அடையாளம் காணப்பட்டனர்!

பொன் அணிகளின் போர் என வர்ணிக்கப்படும் சென். பேட்ரிக்ஸ் கல்லூரிக்கும், வட்டு. யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட மோதலையடுத்து, தைமானத்தில் வைத்து அமலன் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பிலான குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள எட்டுப்பேரில் ஆறுபேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த இக் கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட எண்மரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததுடன் இவர்கள் குறித்த வழக்கு நேற்று மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதிபதி பசீர் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

மேலும் குறித்த சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர்களை அடையாளப்படுத்தும் முகமாக நேற்றுக் காலை நீதிமன்றத்தில் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்ட போது ஆறுபேர் அடையாளம் காணப்பட்டது.

இதே வேளை அடையாளம் காணப்பட்ட ஆறுபேர் உட்பட 8 பேரையும் எதிர்வரும் 8ஆம் தேதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் உத்தரவிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com