Wednesday, March 26, 2014

விமான உதிரிப்பாகங்களை கொள்வனவு செய்து புலிகளுக்கு வழங்கிய கனடிய பிரஜையான இலங்கையருக்கு இரண்டு வருட சிறை தண்டனை!

புலிகள் இயக்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியதுடன் அவர்களுக்கு ஆயுதங்களை கொள்வனவு செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கனேடிய குடியுரிமை கொண்ட இலங்கையரான பிரதீபன் நடராஜா என்பவருக்கு நியூயோர்க் நீதிமன்றம் இரண்டு வருட சிறை தண்டனை விதித்துள்ளது.

இவர் புலிகளுக்கு விமானங்களை தயாரிப்பதற்கான பொருட்களை விநியோகித்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்ததுடன் அவர் தன்மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டிருந்ததன் அதனடிப்படையில் நடைபெற்ற வழக்கு விசாரைணை இன்று நியூயோர்க் நீதிமன்றில் விசாரணைக்கு வந்த போதே இந்த தண்டனை வழங்கப்பட்டது.

ஏற்கனவே இந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட சுரேஷ் சிறிஸ்கந்தராஜா என்பவருக்கு கடந்த ஆண்டு, இரண்டு வருட சிறை தண்டனை வழங்கப்பட்டிருந்தது.

பிரதீபன் நடராஜா / சுரேஷ் சிறிஸ்கந்தராஜா ஆகிய இருவரும் கடந்த 2006ஆம் ஆண்டு கனடாவின் ஒன்டாரியோ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com