Wednesday, March 26, 2014

உலகின் 9 ஆவது பெருஞ் செல்வந்தன் மகிந்தவே! - பொன்சேக்கா

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்த உலகிலுள்ள ஒன்பதாவது பெருஞ் செல்வந்தன் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேக்கா நேற்று மாத்தறை சனத் ஜயசூரிய விளையாட்டுத் திடலில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் குறிப்பிட்டார்.

அவர் அங்கு உரையாற்றும்போது -

“சென்ற சில நாட்களுக்கு முன்னர் பெருமதிப்பிற்குரிய அவர், “ராஜ தேஜய” எனும் பெயரில் பாதையொன்றைத் திறந்து வைத்தார். அதன் பின்னர் அதேவீதியில் கையைப் பொத்திப் பொத்திச் செல்கிறார். உங்களிடமிருந்து பறித்தெடுத்த பணத்தை உங்களுக்கே தருகிறார்… இந்த அதி வேக பாதையை நிர்மாணிப்பதற்காக 7 - 8 வருடங்களுக்கு முன்பே பணம் ஒதுக்கப்பட்டது. அதிலிருந்து மூன்றில் இரண்டு பகுதி திருடப்பட்டுள்ளது.

இன்று எங்கள் நாட்டில் மிலேச்சத்தனமான அரசியல் கலாச்சாரமே உள்ளது. இந்த ஆட்சியாளர்தான் உலகின் 9 ஆவது பெருஞ் செல்வந்தன்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com