Sunday, March 2, 2014

யாழில் அதிரடி நடவடிக்கை ; விடுதிகளில் இருந்த 5 பெண்கள் உட்பட 8பேர் கைது!

யாழ்ப்பாணத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையில் இரண்டு விடுதிகளில் இருந்து இளம் பெண்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று மதியம் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் அரியாலை தபால் பெட்டி சந்திக்கு அருகில் உள்ள அனுமதியற்ற விடுதியில் இருந்து 3 பெண்கள் மற்றும் இரண்டு ஆண்களும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட பெண்களில் இருவர் உரும்பிராயையும் மற்றும் ஒருவர் மாங்குளத்தையும் சேர்ந்தவராவார். கைது செய்யப்பட்ட ஆண்கள் தொடர்பில் ஒருவர் விடுதி உரிமையாளர் என்பதுடன் மற்றையவர் பாஷையூரைச் சேர்ந்தவர் என்றும் தெரியவருகின்றது.

அதேவேளை நல்லூர் அம்மன் வீதியில் அமைந்துள்ள ஒரு விடுதியில் இருந்து 2 பெண்கள் மற்றும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.அவர்களில் பெண்கள் இருவரும் கொழும்பையும் ஆண் அநுராதபுரத்தையும் சேர்ந்தவர்களாவர்.

குறித்த விசேட நடவடிக்கையின் போது வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன், யாழ் மாநகர சபையின் சுகாதார பரிசோதகர் கிஷோக்குமார், யாழ். மாவட்ட குற்றவிசாரணைப் பொறுப்பதிகாரி விக்கிரமாராட்சி, யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன்சிகேரா ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

இதேவேளை கைது செய்யப்பட்ட 8பேரும் தற்போது பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்படுவதுடன் நாளை யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com