Monday, March 3, 2014

புதுக்குடியிருப்பு பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேரின் மண்டை ஓடுகள் மீட்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பகுதியில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த தோட்டத்தை தொழிலாளகள் சுத்தப்படுத்தி கொண்டிருந்தபோது வெளிப்பட்ட ஒரு மண்டை தொடர்ந்து குறித்த பகுதியை மேலும் தோண்டி பார்த்தபோது 9 பேரின் மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மண்டை ஓடுகள் அனைத்தும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டதுடன் அவை அனைத்தும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என கருதப்படுவதுடன் இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகிறது என இலங்கை ராணுவம் செய்தி தொடரபாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் தொடர்ந்து அவர் தெரிவிக்கையில் குறித்த இப்பகுதி புலிகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது எனவே, இக்கொலையை ராணுவம் செய்யவில்லை என்பதுடன் புலிகள் தான் செய்து மறைத்துள்ளனர் என தெரிவித்ததுடன் புலிகள் இது போன்று தமது உத்தரவுக்கு கீழ்ப்படியாதவர்களை அவர்களின் காலத்தில் இது பொன்ற கொன்று புதைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்கள் என தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com