Tuesday, February 25, 2014

மாந்திரீக எண்ணெய் தேய்ப்பதாக கூறி பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட பிக்கு கைது!

பெண்ணொருவருக்குப் பரிகாரப் பூஜை நடத்திய பிக்கு ஒருவர் நள்ளிரவு வேளையில் மாந்திரீக எண்ணெய் தேய்ப்பது போன்று பாசாங்கு செய்து அவர் மீது பாலியல் குற்றம் புரிய முற்பட்டாராம் என்ற குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட பிக்குவை நாளை 26 ஆம் வரை விலக்க மறியலில் வைக்குமாறு தெல்தெனிய நீதிவான் ரொஹான் விஜேவர்த்தன உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது உடதும்பர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் 45 வயது பெண்ணொருவருக்கு இரவு வேளை பிக்கு ஒருவரால் பரிகாரப் பூஜை நடத்தப்பட்டுக் கொண்டிருந்ததடன் பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்த போது பெண்ணின் கணவரையும் மகனையும் வேறொரு இடத்திற்கு செல்லுமாறு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்ததனையடுத்து அவர்கள் வெளியேறிக் சென்றுள்ளனர்.

இதன் பின்னர் நள்ளிரவானதும் அப்பெண்ணை தனி அறைக்கு செல்லுமாறு கூறிய பிக்க அங்கு பெண்ணுக்கு மாந்தீரிக எண்ணெய் பூச வேண்டும் என தெரிவித்து பெண் மீது எண்ணெய் பூசுவது போன்று பாசாங்கு செய்து பாலியல் குற்றம் புரிய முற்பட்டதை கண்ட பெண் இச் செயலிலிருந்து தப்பித்து உடதும்பர பொலிஸ் நிலையத் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து துரிதமாக செயல்பட்ட பொலிஸார் பிக்குவை கைது செய்து நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்தியப் போதே நீதிவான் அவரை 26 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com