Tuesday, February 25, 2014

இலங்கை தென்னாபிரிக்காவுக்கு இடையில் இருதரப்பு விமான சேவை உடன்படிக்கை!

இலங்கையின் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் தலைமையிலான அமைச்சர்கள் குழு அண்மையில் தென்னாபிரிக்காவுக்கு சென்றிருந்தபோது இலங்கையும் தென்னாபிரிக்காவும் இடையில் இருதரப்பு விமான சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பில் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.

இலங்கையின் சார்பில் அமைச்சர் சில்வாவும் தென்னாபிரிக்காவின் சார்பில் அந்த நாட்டின் போக்குவரத்து அமைச்சர் டிப்பூ பீட்டர்ஸும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

தென்னாபிரிக்காவின் பிரச்சினைக்கு காணப்பட்டுள்ள உள்நாட்டு தீர்வை அறிந்து கொள்ளும் முகமாக அமைச்சர்கள் குழு கடந்த 20ஆம், 21 ஆம் திகதிகளில் தென்னாபிரிக்கா சென்று திரும்பியது என்பதுடன் இந்தக்குழுவில் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தாவும் உள்ளடங்கியிருந்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com