Saturday, February 15, 2014

இலங்கையில் பௌத்த சக்திகளை அழிப்பதற்கே மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள்!

இலங்கையில் பௌத்த சக்திகளை அழிப்பதற்கே மனித உரிமை மீறல்கள் மற்றும் குற்றச்சாட்டுக்கள் சுமத்திவருவதாக பாராளுமன்ற உறுப்பினர் எல்லாவள மேதானந்த தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்திய தூதரகப் பெண் அதிகாரியை நிர்வாணப்படுத்தி அந்தப் பெண்ணின் மனித உரிமையை மீறிய அமெரிக்கா, தனது பெண் அதிகாரியான நிஷாய் தேசாய் பிஸ்வால் என்பவரை இலங்கைக்கு மனித உரிமையைக் கற்றுக் கொடுக்க அனுப்பியுள்ளமை நகைப்புக்குரியது.

இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை சுமத்தும் உள்நாட்டு, வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களின் பின்னால் மதவாத சக்தி இருப்பது தெளிவாகியுள்ளது.

பிரபாகரனையும் இப்படியான மதவாத சக்தியே வழிநடாத்தியது என்பது தெளிவாகத் தெரிந்தது. இந்த சக்திகளுக்கு நாட்டுக்கு நன்மை செய்யும் நோக்கங்கள் இல்லை.

நாட்டில் உள்ள பௌத்த சக்திகளை அழிப்பதற்காகவே இலங்கை மீது மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன. பிஸ்வால் போன்ற தூதுவர்களுக்கு பந்தம் பிடிக்கும் தேசத்துரோகிகளின் செயற்பாடுகளால் நாட்டுக்குப் பாதிப்பு ஏற்படும்.

பிரபாகரன் குண்டுகளை வீசும்போது, நடுங்கிக் கொண்டு கட்டிலுக்கு அடியில் ஓடி மறைந்துகொண்ட இலங்கையில் உள்ள தேசத்துரோகிககள் தற்போது வெளியில் வந்து மனித உரிமைகள் பற்றி பேசுகின்றனர் என எல்லாவள மேதானந்த தேரர் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com