பேஸ்லைன் வீதியில் எதிர்ப்பார்ப்பாட்டம்!
நபரொருவரை கடத்திய சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வனாத்தமுல்ல பிரதேசவாசிகள் சிலர் பேஸ்லைன் வீதியை மறித்து இன்று பிற்பகல் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
தெமட்டகொட ரயில் நிலைய விளையாட்டு மைதானத்திற்கு அருகில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
எவ்வாறாயினும், ஆர்ப்பாட்டம் காரணமாக இன்று பிற்பகல் சில மணித்தியாலங்களுக்கு பேஸ்லைன் வீதியின்போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது.
இதேவேளை, பெஸ்லைன் வீதியின் மவுன்மேரி சந்திக்கு அருகில் சிவப்பு நிற வானில் இன்று காலை வந்த சிலரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக, கடத்தப்பட்டதாக கூறப்படும் நபரின் மகள் தெமட்டகொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது. இந்த கட்டத்தல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் உடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
0 comments :
Post a Comment