Friday, February 21, 2014

மாணவிகளை துஷ்பிரயோகம் செய்ததாக பாடசாலை வேன் சாரதி கைது!

கொழும்பு மஹரகம பகுதியில் 9 வயதான 4 பாடசாலை மாணவிகளை வேனில் பாடசாலைக்கு அழைத்துச் செல்லும்போது சாரதியினால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்பட்டு பாடசாலை சேவையிலீடுபடும் வேன் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மாணவியரின் பெற்றோர்கள் பாடசாலை ஆசிரியர்களுக்கு சம்பவம் தொடர்பாக அறிவித்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட சாரதி மஹரகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதே வேளை துஷ்பிரயோகத்திற்கு உள்ளான 4 மாணவிகளும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தும் பொருட்டு கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com