Friday, February 21, 2014

அதிபரைத் பலகைப் பட்டியால் தாக்கி காயப்படுத்திய மாணவன் கைது!

வெலிக்கந்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட செவனப்பிட்டிய வித்தியாலயத்தை சேர்ந்த 55 வயதான அதிபரை அதேபாடசாலையின் மாணவர் ஒருவர் தாக்கியுள்ளார் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்து.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது நேற்றுக் காலை வகுப்பறையொன்றில் மூன்று மாணவர்கள் பாடல் பாடி சப்தமிட்டுக் கொண்டிருந்த சமயம் வகுப்பறைக்கு வந்த அதிபர் கண்டித்துள்ளார் அதன்போது அந்த மாணவர்களில் ஒருவர் அதிபரை பலகைப் பட்டியால் தாக்கியதில் அதிபர் காயமுற்ற நிலையில் வெலிக்கந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செவனப்பிட்டிய வித்தியாலயத்தில் க.பொ.த ச/த பரீட்சையில் தோற்றி பெறுபேறுக்காக காத்திருக்கும்மாணவனே இவ்வாறு அதிபரை தாக்கியுள்ளார் என்பதுடன் குறி்த்த மாணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த மாணவனை நீதாவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிசார் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com