Friday, February 21, 2014

கொழும்பிற்கு ஆயுதங்களை கடத்திய புலி உறுப்பினர்களுக்கு சிறைத்தண்டனை!

நான்கு பொதிகளில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை கொழும்பிற்கு எடுத்துச் சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இரண்டு புலி உறுப்பினர்களும் வெடிபொருட்களை கடத்தியதாக நீதிமன்றில் ஒப்புக்கொண்டதனை அடுத்து இரண்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குழந்தைவேலு தயாபரன் மற்றும் கார்த்திகேசு நாதன் ஆகியோருக்கே இவ்வாறு உயர் நீதிமன்ற நீதவான் எஸ்.மொராயஸ் இந்த தண்டனையை விதித்ததுடன் இந்த இரண்டு புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com