Tuesday, February 11, 2014

வேட்பாளர்கள் பிரச்சாரத்திற்காக இலவச தபால் முத்திரைகளை பாவிக்கின்றனர். சாடுகின்றது கபே.

நடைபெறவிருக்கின்ற மாகாண சபைத் தேர்தலின் வேட்பாளர்கள் சிலர் இலவச தபால் முத்திரைகளை பாவிப்பதாகவும் அதற்கு எதிரான நடடிவக்கைகளை மேற்கொள்ளுமாறும் சுதந்திரமானதும் நேர்மையானதுமான தேர்தலுக்கான அமைப்பு (கபே) தபால் அத்தியட்சகர், தேர்தல் ஆணையாளர் , சபாநாயகர் ஆகியோரிடம் முறையிட்டுள்ளது.

சில வேட்பாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச முத்திரைகளை தமது தேர்தல் பிரச்சார விளம்பரங்களுக்கு பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இவ்வமைப்பு சபாநாயகரிடம் மேற்கொண்டுள்ள முறைப்பாட்டில் இவ்வாறான சீர்கேடுகள் தொடர்பில் கடந்த தேர்தல்களிலும் சுட்டிக்காட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளதுடன் நடைபெறவிருக்கின்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் விந்தன நிசாந்த கப்புத்தன்திறிகே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அனுர குணரட்ண மற்றும் நிலந்த ஹெந்தவிதாரன ஆகியோர் மேற்படி முறைகெட்ட செயலில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com