நம் நாட்டு பெண்கள் பணிப்பெண்களாக செல்வதை தடுப்பதற்கு வருகிறதாம் சட்டம்!
இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு உட்பட வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்வது தடை செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெண்கள் இவ்வாறு வெளிநாடுகளுக்குச் செல்வதனால் குடும்பங்கள் பிரிவதாகவும், சமூகப் பிரச்சினைகள் அதிகரிப்பதாகவும் சுட்டிக் காட்டியுள்ள குவைத்துக்கான இலங்கைத் தூதுவர் ஸீ.ஏ.எச்.எம். விஜேரத்ன, மிக விரைவில் பணிப்பெண்களாக வெளிநாடு செல்வதைத் தடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் என தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment