Tuesday, February 11, 2014

கஞ்சா புகைத்த களனி பல்கலை மாணவர்கள் 13 பேர் கைது!

களனிப்பல்கலைக்கழக வளாகத்தில் கஞ்சா புகைத்து கொண்டிருந்த கலை மற்றும் வர்த்தக பீடங்களைச்சேர்ந்த 13 மாணவர்களை பல்கலைக்கழக ஒழுக்க நிர்வாக அதிகாரிகளின் உதவியுடன் கைது செய்துள்ளதாக தெரிவித்த பேலியகொடை பொலிஸார், அவர்கள் வசமிருந்த 13 கஞ்சா சுருட்டுகளையும் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்தனர்.

சந்தேக நபர்களை மஹர நீதிமன்றத்தில் இன்றையத்தினம் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com