Thursday, February 20, 2014

மாடு அறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிங்கள ராவயவின் போராட்டம் முடிவு!

மாடு அறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு, கோட்டை ரயில் நிலையப் பகுதியில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை அடுத்து சிங்கள ராவய அமைப்பைச் சேர்ந்த பிக்குமார்களினால் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.


ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமையவே இந்த போராட்டம் கைவிடப்பட்டதாக சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்தார்.

மாடு அறுப்பதற்கு எதிராக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கை என்னவென்பது தொடர்பில் கடந்த ஆறு மாதங்களாக காத்துக்கொண்டிருக்கிறோம் என்றும் அவர் மேலும் கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com