Thursday, February 20, 2014

அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் மகன் பகீரதன் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

புலிகளால் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் எதிர்க் கட்சித் தலைவருமான தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் செயலாளர் நாயகம் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் மகன் பகீரதன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை அலரி மாளிகையில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்தச்சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதியமைச்சர் கீதாஞ்சன குணவர்தன ஆகியோரும் கலந்து கொண்டனர். 

அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் 1988ஆம் ஆண்டில் கொழும்பில் வைத்து புலிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com