Sunday, February 16, 2014

வட மாகாண சபை பெயரில் நிதி சேகரிப்பு நடவடிக்கையாம்- சீ.வீ .கே .சிவஞானம்!

வட மாகாண சபையின் இலச்சனையை பாவித்தும் வட மாகாண சபை அனுசரணை வழங்குவதாக குறிப்பிட்டு கனடா நாட்டு நிறுவனம் ஒன்று விளம்பரம் ஒன்றை வெளியிட்டு நிதி சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக இணையதளங்கள் மூலம் அறியப்படுகின்றது என வடக்கு மாகாணசபை அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நடவடிக்கை தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் எம்மோடு தொடர்புகொள்ளவில்லை என்பதுடன் இவ்வாறான நடவடிக்கைக்கு வட மாகாண சபை எவ்வித ஒப்புதலோ அங்கீகாரமோ அளிக்கவில்லை என்பதையும், வட மாகாண சபையின் இலச்சனையை வேறு எவரும் உபயோகிப்பது முறையற்றதும், சட்டத்துக்கு முரணானது என்பதை தெரிவித்துக் கொள்வதுடன், வட மாகாண சபை நிதி சேகரிப்பில் ஈடுபடுவது என்ற தோற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கை சட்டங்களுக்கு முரனானது என தெரிவித்துள்ளார்.

மெலும் சம்பந்தபட்ட நிறுவனம் இந்த விடயத்தை கவனத்தில் எடுத்து வட மாகாண சபையின் பேரையும், இலட்சனையும் ஊடங்கங்களிலும், இணையதள விளம்பரங்களிலிருந்தும் நீக்கி விடுமாறு கேட்டுகொண்டுள்ளார்.    

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com