Wednesday, February 19, 2014

ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு மேலும் 2 ஆயிரத்து 600 கோடி ரூபாவை வழங்கவுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கையின் திறன் அபிவிருத்திக்கு 2 ஆயிரத்து 600 கோடி ரூபாவை வழங்கவுள்ளது. இலங்கையில் மனித வளம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிப்பதானது திறன் அபிவிருத்தி துறைக்கு இன்றியமையாத ஒன்றாகும். இந்நிதியை பெற்று கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதுடன் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி, மற்றும் பயிற்சித்துறையில் இலங்கை 62வது இடத்திலுள்ளது. மனித வளம் நிபுணத்துவம் தொடர்பான விடயங்களில் 135வது இடத்தை இலங்கை வகிக்கின்றது. எழுத்தறிவு, கணினி, தொழிநுட்பம் ஆகியவற்றில் இலங்கை துரிதமாக முன்னேறி வருவதுடன் அதனை மேலும் அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com