Tuesday, February 18, 2014

தீக்குளிக்க முயன்ற தேரர் பொலிஸாரால் கைது!

மிருகவதைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோட்டை ரயில் நிலையம் முன்பாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் தீக்குளிக்க முயன்ற பௌத்த பிக்கு ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாடுகளை வெட்டுதல் முதலான மிருகவதைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றிலிருந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று கோட்டை ரயில் நிலையம் முன்பாக நடந்து வருகின்றது.

பௌத்த பிக்குகளின் தலைமையில் நடைபெறும் குறித்த ஆர்ப்பாட்டத்தில் இன்று பகல் இனம்தெரியாத சிலர் தாக்குதல் நடத்தி குழப்பம் விளைவித்து சென்றுள்ளனர். அதனை தொடர்ந்து குறித்த பகுதியில் அமைதியின்மை காணப்படுவதோடு, கடும் வாகன நெரிசல் காணப்பட்டது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com