Thursday, January 9, 2014

ஸ்டீபன் ஜே. ரெப்பின் இலங்கை வருகைக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

அமெரிக்காவின் போர் குற்றவிசாரணைக்குப் பொறுப்பான விசேட தூதுவர் ஸ்டீபன் ஜே. ரெப் இலங்கை வந்துள்ள மைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறு கிறது. இதன் காரணமாக கொள்ளுபிட்டி தொடக்கம் காலி முகத்திடல் வரையான பிரதான வீதியின் ஒருவழி மூடப் பட்டுள்ளதாகவும், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள தாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேசிய சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் அதிகமான பௌத்த பிக்குமார் கலந்து கொண்டுள்ளனர்.

ஜெனீவா மாநாட்டில் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகளுக்கு எதிராகவும் விடுதலைப் புலிகளை மீண்டும் உயிர்ப்பிக்க அமெரிக்கா முற்படுவ தற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷம் எழுப்புகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com