Thursday, January 2, 2014

கொழும்பிலிருந்து போட்டியிட வருகின்றார் ஹிருணிகா

மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி ஆலோசகருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மகளான ஹிருணிகா பிரேமச்சந்திர எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

அவர், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்காக மேல்மாகாணம் – கொழும்பு மாவட்டத்திலிருந்து போட்டியிடவுள்ளதாக அறிவந்துள்ளது.

மேல்மாகாணம் – கொழும்பிலிருந்து அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவின் மகன் யதாமினி குணவர்த்தன மற்றும் களுத்துறையிலிருந்து அமைச்சர் கமார வெல்கமகேவின் மகன் செனால் வெல்கமவும் ஐக்கிய சுதந்திர முன்னணிக்காகப் போட்டியிடவுள்ளதாக உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இலஞ்ச ஊழல்கள் மற்றும் ஒழுக்கமற்றமுறையில் நடந்துகொண்டுள்ள எந்தவொரு உறுப்பினர்களையும் இத்தேர்தலில் நிறுத்தாதிருக்கவே ஆளும் கட்சி முடிவுசெய்துள்ளது எனவும் தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com