Monday, January 6, 2014

தெற்­கா­சி­யாவில் பன்­மு­கத்­தன்­மையின் சவால்கள்' தொடர்பில் கொழும்பில் விசேட கருத்­த­ரங்கு!

தெற்காசியாவில் பன்முகத்தன்மையின் சவால்கள் எனும் தலைப்பில் உள்நாட்டு மற்றும்சர்வதேச ஆய்வாளர்கள் கலந்துகொள்ளும் விசேட கருத்தரங்கு ஒன்று தெற்காசிய கொள்கை மற்றும் ஆய்வு நிறுவனத்தினால் ஏற்பாட்டில் நாளை செவ்வாய்க்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையில் நடைபெறவுள்ளது.

அத்துடன் இந்தக் கருத்தரங்கில் பேராசிரியர் ராதிகா குமாரசுவாமி , இந்தியாவின் , பேராசிரியர் ரஜீவ் பார்கவா , பிரான்ஸ் நாட்டின் கலாநிதி கிறிஸ்டோபி ஜெப்ரீலோட் பாகிஸ்தானின் அஸ்மா ஜஹாங்கீர் ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.

அமைதியான ஒத்திணங்கிய வாழ்வு , மத சகிப்புத்தன்மை பன்மை சமூகங்கள் போன்ற தலைப்புக்களில் உரை நிகழ்த்தப்படவுள்ளன . மதங்களுக்கு இடையில் பிணக்குளை உருவாக்கும் செயற்பாடுகளை எவ்வாறு தவிர்ப்பது என்பது தொடர்பாக கருத்தரங்களில் விரிவாக ஆராயப்படும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com