வடமாகாண நீதிபதிகளுக்கான செயலமர்வில் கலந்து கொண்டார் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ்!
வடமாகாண நீதிபதிகளுக்கான ஒரு நாள் செயலமர்வு யாழ்.நீதிமன்றக் கட்டிடத்தில் இன்று (30.01.2014) காலை ஆரம்பித்துள்ளதுடன் இந்தச் செயலமர்வில் 'சட்டமும் வழக்கு நடைமுறைகளும்' என்ற தலைப்பில் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் மற்றும் அமெரிக்காவிலிருந்து வருகை தந்த நீதிபதி ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டு விளக்கவுரைகளை வழங்கினர்.
இச்செயலமர்வில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 9 நீதிபதிகள் கலந்துகொண்டிருந்ததுடன் செயலமர்வின் பின் நீதிபதிகள் குழு நல்லூர் கந்தனையும் சென்று தரிசித்தனர்.
நல்லூர் ஆலய தரிசன நிகழ்வில் வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி மற்றும் ஆளுநரின் செயலாளர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 comments :
Post a Comment