காணாமல் போன வெள்ளைக் கடலாமை மீட்கப்பட்டது!
கடந்த 2013 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் திகதி கொஸ்கொடை ஆமை சரணாலயத் திலிருந்து 35 மில்லியன் ரூபா பெறுமதி யான வெள்ளைக் கடலாமை காணாமற் போய்விட்டதாக, உரிமையாளரால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடரந்து பொலிசாரின் துரித விசாரணைகள் மற்றும் தேடுதலின் போது வெள்ளைக் கடலாமை அம்பலாங்கொடையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வெள்ளைக் கடலாமையானது உரிமையாளரின் மகளின் வீட்டிலிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, உள்ளாட்டுக் கலைஞர் அமல் பெரேரா என்பவரிடமும் ஆமையை நாட்டுக்கு வெளியே கடத்தப்பட்டிருக்கலாமென்ற சந்தேகத்தில் பொலிஸார் விசாரணை நடத்தி யிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment