Sunday, January 19, 2014

பொலிஸாருக்கு எதிராக கிளர்ந்தெழுகிறார் பொன்சேக்கா!

தான் இலங்கைப் பொலிஸாருக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக ஜனநாயக்க் கட்சியின் தலைவர் சரத் பொன்சேக்கா குறிப்பிடுகிறார்.

தமது கட்சியினர் நேற்று முன்தினம் பலப்பிட்டி வியாபார நிலையத்திற்கு முன்பாக நடாத்திய கூட்டத்தை நடாத்தவிடாமல் பொலிஸார் .இடைஞ்சல் ஏற்படுத்தியதாக அவர் குற்றம் சுமத்துகிறார்.

ஒலிவாங்கியைப் பயன்படுத்துவதற்கு அனுமதி பெறப்படவில்லை எனக் குறிப்பிட்டு, அந்தக் கூட்டத்தை நடத்தவிடவில்லை எனவும், அதனால் பொன்சேக்கா பொலிஸாருக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாகத் தெரியவருகின்றது.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com