Tuesday, January 21, 2014

மாணவியின் மரணம் கொலையா? தற்கொலையா? விசாரணைகளின் பின்னரே தெரியவரும்!

குருந்துகஹஎல பிரதேசத்தைச் சேர்ந்த மல்வானஹின்ன பாடசாலையில் 9 ஆம் தரத்தில் கல்வி கற்ற மொஹமட் ராசிக் ஆயிஷா என்ற 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.குறித்த மரணம் தற்கொலையா அல்லது கொலையா என விசார ணைகளின் பின்னரே தெரியவரும் என அலவத்துகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த குறித்த சிறுமியின் சகோதரி, மூன்று தினங்களுக்கு முன்னர் தனது கணவரின் சதோரனுடனான காதலை நிறுத்திகொள்ளுமாறு சிறுமியை எச்சரித் துள்ளார் எனவும், இதனையடுத்து சிறுமி மனம் நொந்து காணப்பட்டார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com