Wednesday, January 8, 2014

அடர்ந்த காட்டுப்பகுதியில் செய்கைபண்ணப்பட்டிருந்த 20 இலட்சம் ரூபா பெறுமதியான கஞ்சா சேனை சுற்றிவளைப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வட்டவான் அடர்ந்த காட்டுப்பகுதியில் மாவட்ட மதுவரி திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு தேடுதலின் போது பாரியளவில் செய்கை பண்ணப்பட்டிருந்த கஞ்சாசேனை கண்டுபிடிக்கப்பட்டதாக மாவட்ட மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரி கே.தங்கராசா தெரிவித்தார்.

சோளம் செய்கைக்கு மத்தியில் பெரும் பாதுகாப்பான முறையில் அடர்ந்த யானைக் காட்டில் செய்கை பண்ணப்பட்ட மூன்று அடி உயரமான 70 கஞ்சா மரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் ஒரு மரத்திலிருந்து 1 கிலோ கஞ்சாவை அறுவடை செய்ய முடியும் என்பதுடன் கைப்பற்றப்பட்டுள்ள கஞ்சா மரங்களின் பெறுமதி சுமார் 20 இலட்சம் ரூபா பெறும் என மாவட்ட மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரி கே.தங்கராசா தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com