Saturday, December 14, 2013

இரண்டாவது நாளாகவும் தொடரும் யாழ் போதனா வைத்தியசாலை தொண்டர்களின் பணிப்புறக்கணிப்பு!

யாழ். போதனா வைத்திய சாலையில் தொண்டர்களாக பணிபுரிவோர் தமக்கு நிரந்தர நியமனம் வழங்கக்கோரி நேற்று(13.12.2013) ஆரம்பமான பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்வதால் யாழ். போதனா வைத்தியசாலையின் நோயாளர் பராமரிப்பு மற்றும் நோயாளர்களை கொண்டு செல்லல் என்ன பாதிப்படைந்துள்ளது.

இதனால் விடுதிகளில் தங்கியிருந்து பணிபுரியும் தாதியர்களும், சுகாதார சிற்றூழியர்களும் நோயாளர்களை பரிசோதனைகளுக்காக கொண்டு செல்வதுடன் போதிய ஆள் வசதி இல்லாத காரணத்தால் நோயாளர்கள் சேவையிலும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளது.

இதே வேளை தமக்கு தீர்வு கிடைக்குவரை போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கப்போவதாக தொண்டர்கள் தெரிவிக்கின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com