Saturday, December 14, 2013

வாகன ஓட்டுநர்களுக்கு இனி கடுமையான சட்டங்கள்:சீ.பி.ரத்­னா­யக்க!

எதிர்­வரும் காலங்­களி்ல் வாகன ஓட்­டு­நர்கள் தொடர்பில் புதிய கடு­மை­யான சட்­டங்­களை அமுல்­ப­டுத்­தப்­போ­வ­தாக தெரிவித்த தனியார் போக்­கு­வ­ரத்து துறை அமைச்சர் சீ.பி.ரத்­னா­யக்க மோட்டார் சைக்­கிள்­களில் தலைக்­க­வசம் இல்­லா­மல் மற்றும் ஒரு கைப்­பிடியை மட்டும் பிடித்துக் கொண்டு மோட்டார் சைக்­கிளை செலுத்­துதல் மற்றும் தொலை­பே­சியி்ல் உரை­யாடிக் கொண்டு வாகனம் செலுத்­து­வோ­ருக்கு எதி­ரா­கவே கடும் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வுள்ளதாக தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று(13.12.2013)வெள்­ளிக்­கி­ழமை நடைபெற்ற போக்­கு­வ­ரத்து அமைச்சு மீதான குழு நிலை விவா­தத்தில் உரை­யாற்றும் போதே அமைச்சர் ரத்­னா­யக்க இதனைத் தெரிவித்ததுடன் பாட­சாலை பஸ்­களில் ப­ய­ணிக்கும் பிள்­ளை­களின் பாது­காப்பை உறுதி செய்யும் வகையில் அப்­பிள்­ளை­களின் பெற்­றோ­ருக்கு குறுஞ்­செய்தி அனுப்பும் முறை­மை­யொன்றும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது எனக்குறிப்பிட்டார்.

மேலும் பஸ் சேவையை சிறப்­பான முறையில் நடத்­து­வ­தற்கு திட்­டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன் பஸ்ஸில் சீ.சீ.டிவி மற்றும் ஜீ.பி.எஸ் என்பன பொருத்தப்படவுள்ளதுடன் சார­திகள் மற்றும் நடத்­து­னர்­கள் பய­ணி­க­ளுக்கு நல்ல சேவை­களை சரியான முறையில் முன்­னெ­டுக்­கின்­றார்­களா என்­பது தொடர்பாகவும் கண்­கா­ணிக்­கப்­ப­ட­வுள்­ளது எனக்குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com