Thursday, December 12, 2013

காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் கால எல்லை நீடிப்பு!

வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பிரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் நோக்கில் வட க்கு, கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிப்பதற்காக ஜனா திபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவினால் முறைப்பாடுகளை பொறுப்பே ற்பதற்கான காலத்தை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

நவம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் காணாமல் போனோர் தொடர்பான முறைப் பாடுகளை சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் பொது மக்களும் பல்வேறு நிறுவனங்களும் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இவ்வாணைக்குழு இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com