புதிதாக இணைத்துக் கொள்ளப்படும் 13 விமானங்கள்!!
விமான சேவையை மேலும் விஸ்தரிக்கும் வகையில், ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸில் புதிதாக 13 விமானங்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளன. ஏ-330, 300 எயார் பஸ் ரக 6 விமானங்களும், ஏ-350 மற்றும் 900 எயார் பஸ் ரக 7 விமானங்களும் கொள்வனவு செய்யப்படவுள்ளன. இது தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்கனவே கைச்சாத்திடப்பட்டு ள்ளதாக, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித் துள்ளது.
28 ஆயிரத்து 8 கோடி ரூபா இதற்காக செலவிடப்படவுள்ளது. தற்போது விரயமாகும் எரிபொருளின் அளவை குறைப்பதே, இம்முதலீட்டின் முக்கிய நோக்கமாகும். 13 பழைய விமானங்களை குத்தகை காரர்களிடம் ஒப்படைத்து, புதிதாக விமானங் களை கொள்வனவு செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் தெரிவித்துள்ளது.
இலங்கையின் தேசிய பொருளாதாரத்தில் 3.8 சதவீத பங்களிப்பை விமான சேவைகள் வழங்குகின்றன. இதில் 2.2 சதவீதமான பங்களிப்பை ஸ்ரீ லங்கா எயார் லைன்ஸ் வழங்குகின்றமை, குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment