Friday, November 22, 2013

பாப்பாண்டவர் பிரான்சிசை சந்தித்தார் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ !

பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பாப்பாண் டவர் பிரான்சிசை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். வத் திக்கானிற்கு விஜயம் செய்துள்ள பாதுகாப்புச் செயலாளர் பாப்பாண்டவருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். இதன்போது இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பை பாதுகாப்புச் செயலாளர் பாப்பாண்டவரிடம் ஒப்படைத்துள்ளார்.

உலக சமாதானத்திற்காக பாப்பாண்டவர் ஆற்றி வரும் சேவைகள் பாராட் டுக்குரியவை என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார். 30 வருடகால யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் நாட்டில் பாரியளவில் நல்லிணக்கம் ஏற்ப்பட்டுள்ளதாக பாப்பாண்டவரிடம் பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டி யுள்ளார்.இலங்கை வத்திக்கானுடன் நெருங்கிய தொடர்புகளை பேண ஆர்வம் காட்டுகிறது. பாப்பாண்டவர் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டுமெனவும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாப்ய ராஜபக்ஷ இதன்போது அழைப்பு விடுத்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com