Wednesday, November 20, 2013

கோத்தபாய ராஜபக்ஸவின் அழைப்பை ஏற்று மார்ச் மாதம் பாப்பரசர் இலங்கை விஜயம்

கத்தோலிக்க மக்களின் தலைவராக கருதப்படும் பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் அவர்கள் எதிர்வரும் மார்ச் மாதத்தில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார் என்று உரோமிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் நாவலகே பேர்னாட் குரே தெரிவித்தார்.

இது தொடர்பாக வத்திகானுக்கு சென்றுள்ள இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, மற்றும் அவரது பாரியார் புஷ்பா ராஜபக்ஷ ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.

இவ் அழைப்பினை ஏற்றுக் கொண்டே பாப்பரசர் மார்ச் வருவதாக தெரிவித்ததாக உரோமில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com