Friday, November 1, 2013

குடா ஓயாவில் லொறி - முச்சக்கர வண்டி விபத்து! ஒருவர் ஸ்தலத்திலேயே பலி! (படங்கள் இணைப்பு)

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன்–நுவரெ லியா பிரதான வீதியில் குடா ஓயா பகுதியில் இன்று (01) முற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிர் துறந்துள்ளார்.

கொட்டகலையிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற ஆர்.டீ.ஏ. லொறியுடன் தெஹிவளையிலிருந்து கொட்ட கலைக்குச் சென்ற முச்சக்கரவண்டி மோதியே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.

குறித்த முச்சக்கர வண்டியில் சாரதியுடன் இருவர் பயணித்துள்ளனர். இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேலும் இருவர் கிளங்கன் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதால் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட் டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் கிளங்கன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(MN)

1 comments :

Anonymous ,  November 1, 2013 at 1:58 PM  

Very sad news. Unnecessary lost.
Our condolence for the grieving family members.

The drivers should obey the rules and respect the lives. Careless driving shouldn't be allowed.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com