Friday, November 1, 2013

சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட சமுர்த்தி முகாமையாளர் இடைநிறுத்தம்!

சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக குற்றஞ் சாட்டப் பட்டுள்ள சமுர்த்தி முகாமையாளர் இடைநிறுத்தப்பட் டுள்ளார். செங்கலடி பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி முகாமையாளராக கடமையாற்றும் சி. திலீப் குமார் என்பரே சமுர்த்தி முகாமையாளர் பதவியிலிருந்து இடை நிறுத் தப்பட்டுள்ளார். தாபனக்கோவை விதிகளுக்கு அமைவாக இவரின் பதவி இடை நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரான இவர் மூன்று சிறுவர்களை துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கடந்த திங்கட்கிழமை காத்தான்குடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நவம்பவர் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com