Friday, November 1, 2013

உலக நாடுகள் இலங்கையுடன் இணைந்து செயற்பட வேண்டும்: அவுஸ்திரேலியா

30 ஆண்டு யுத்தத்தின் பின்னர் இலங்கையில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் அதில் உலக நாடுகள் இலங்கையுடன் இணைந்து செயற்பட வேண்டு மென அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஜூலியா பிஸப்பும் தெரிவித்துள்ளார்.

மேலும் தாமும், பிரதமர் டோனி அப்போடும் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளதுடன் நீண்ட கால அடிப்படையில் இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனைவிட தற்போது இலங்கை எதிர்நோக்கி வரும் சவால்களுக்கு தீர்வு வழங்க பிராந்திய வலய நாடுகளும் சர்வதேச அமைப்புக்களும் ஏனைய உலக நாடுகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com