Sunday, November 3, 2013

ஜனாதிபதியுடன் விக்னேஸ்வரன் இணைந்து செயற்படுவாரானால் தமிழர்களுக்கு வெற்றிதான்! கே.பி

நட்பு ரீதியான அணுகுமுறையே தமிழர்களுக்கான எதிர்கால தீர்வை நிர்ணயிக்கும் எனவும், தற்போதைய தலைவர்களான ஜனாதிபதியும், வட மாகாண முதலமைச்சரும், வடக்கில் உள்ள தனியார் காணிகளை மீள அதன் உரிமையாளர்களுக்கு வழங்கி, நியாயமான குடியேற்றத்தை உறுதிப்படுத்தி, அதற் கான தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்கு பொருத்தமானவர்கள் என புலிகள் இயக்கத்தின் முன்னாள் வெளிவிவகார பொறுப் பாளர் கேபி எனப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

வட மாகாண முதலமைச்சர் சீ. வி. விக்னேஸ்வரன் வட மாகாண சபையின் கன்னி அமர்வின்போதும் அதன் பின்னரும் ஆற்றிவரும் உரைகள், எதிர்காலம் நோக்கி சாதகதன்மையை வெளிப்படுத்தி இருப்பதாகவும் வடக்கில் யுத்தத்தால் பாதிக் கப்பட்ட மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசுடன் இணைந்து வேலைத் திட்டங்களை வட மாகாண சபை உருவாக்க வேண்டும் எனவும் கே.பி தெரிவித் துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com