Sunday, November 3, 2013

தலிபான் பயங்கரவாத தலைவர் ஹக்கீமுல்லா கொல்லப்பட்டதற்கு பாகிஸ்தான் அமெரிக்கா மீது சீறிப் பாய்கின்றது!

அமெரிக்ப்படையினரின் ஆளில்லா விமானம் மேற்கொண்ட தாக்குதலில் தலிபான் அமைப்பின் பாகிஸ்தான் தலைவர் கொல்லப்பட்டமையானது, தனி ஒரு நபரின் கொலையாக இதனை கருத முடியாது எனவும், இந்த நடவடிக்கை வளர்ச் சியடைந்து வரும் சமாதான பேச்சுவார்த்தைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித் துள்ளது.

அத்துடன் சமாதான பேச்சுவார்த்தை தொடர்பில் தலிபானியர்களுடன் கலந்துரை யாடுவதற்கு பாகிஸ்தான் உயரதிகாரிகள் சிலர் வஷிரிஸ்தான் பகுதிக்கு விஜயம் செய்யவிருந்தனர். இந்நிலையிலேயே தலிபான் தலைவர் கொல்லப்பட்டுள்ளார். இவ்வாறான முக்கியமான தருணத்தில் அமெரிக்கா மேற்கொண்ட குறித்த செயற்பாடானது, பாகிஸ்தானின் சமாதான பேச்சுவார்த்தையை மூழ்கடித்தமை போன்றதென பாகிஸ்தான் உட்துறை அமைச்சர் சௌத்ரி நிசார் அலி கான் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை நாட்டின் சமாதான பேச்சுவார்த்தையை முடக்குவதற்காக அமெரிக்க மேற்கொள்ளும் இவ்வாறான ஆளில்லா விமானத் தாக்குதல்களினால் தாம் ஒருபோதும் தோல்வியடையப்போவதில்லையென பாகிஸ்தான் தகவல்துறை அமைச்சர் பர்வேஷ் ராஷிட் தெரிவித்துள்ளார்.

அமெரிக்ப்படையினரின் ஆளில்லா விமானம் மேற்கொண்ட தாக்குதலில், தலிபான் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவரான ஹக்கீமுல்லா மசுத் உட்பட மேலும் பலர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com